அங்கு ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க மருத்துவக்குழு முடிவு செய்தது. அதன் படி மருத்துவர்களின் கடின முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சவாலான இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 15 நாட்களுக்கு மேலாக ராஜேஸ்வரியை தீவிரமாக கண்காணித்து அவருக்கு சிரமம் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 3 அடி உயரமுள்ள பெண்ணிற்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்து சாதனை படைத்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவகுழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.