3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார் ஓவியா

சென்னை: மலையாள நடிகை ஓவியா, தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். அவ்வப்போது காதல் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு திடீரென்று புதுப்பட வாய்ப்பு வருவது குறைந்துவிட்டது. இந்நிலையில், டி.வி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். தற்போது வெப்தொடரிலும் நடித்து வரும் அவர், தமிழில் 2019ல் ரிலீசான ‘களவாணி 2’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதையடுத்து, திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக ஓவியா பற்றி தகவல் வெளியானது. இதை அவர் மறுத்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும், தனது திருமணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவரது கைவசம் ‘ராஜபீமா’, ‘சம்பவம்’ ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு ஓவியா மீண்டும் தமிழில் நடிக்கிறார். யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் ஓவியா நடித்துள்ளார். இதை ஸ்வாதீஸ் எம்.எஸ் இயக்கியுள்ளார். முதலில் இப்படத்துக்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப் பட்டது. விஜய், சூர்யா, தேவயானி நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு ஏற்றிருந்த கேரக்டர் பெயர், கான்ட்ராக்டர் நேசமணி. கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில், ‘கான்ட்ராக்டர் நேசமணிக்காக வேண்டிக் கொள்ளுங்கள்’ என்ற ஒரு ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது. இந்த நிலையில், தற்போது வடிவேலு மீண்டும் நடித்து வருவதால், ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயர், ‘பூமர் அங்கிள்’ என்று மாற்றப்பட்டு உள்ளதாக படக்குழு கூறியது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு