3 குழந்தைகளுடன் பெண் மாயம்

 

விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலம் அருகே உள்ள செம்பளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்தராஜ்(31). இவரது மனைவி ரமணி(30). இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனந்தராஜ், விருத்தாசலத்தில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி ரமணி தனது குழந்தைகளுடன் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து ஆனந்தராஜ், விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமணி (30), ருத்ரன்(8), மித்ரா(6), யுவன்(4) ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Related posts

அந்தியூர் அருகே 129 மூட்டை புகையிலை பொருட்கள் லாரியுடன் சிக்கியது

அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி கூலியை உயர்த்த வேண்டும்: விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

தபால் அலுவலகங்களில் விபத்து காப்பீடு; 3 நாள் சிறப்பு முகாம்: இன்று முதல் துவக்கம்