3 குழந்தைகளுடன் மனைவி மாயம்

விருத்தாசலம், நவ. 8: விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெயக்குமார்(32). விருத்தாசலம் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சூர்யா(29) என்ற மனைவியும், பிரீத்தி(11), ஜீவா(10), என்ற மகள்களும் பிரசன்னா (7) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வேப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் கேட்டபோது, சூர்யா வந்து கடனாக பணம் வாங்கிக் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை என கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் சூர்யா மற்றும் குழந்தைகள் என 4 பேரும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயக்குமார், விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்