3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் உடனே பணியில் சேர உத்தரவு

வேலூர், ஜூலை வேலூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற 3 இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பணியில் சேர எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் சரகத்தில் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கே.நாகராஜ், வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கும், இங்கு பணியில் இருந்த ஏ.பழனிமுத்து லத்தேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வேலூர் சரகத்துக்கு மாற்றப்பட்டு இருந்த இன்ஸ்பெக்டர் பி.டில்லிபாபு பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தற்போதுள்ள காவல் நிலையங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புதிய பணியிடங்களில் உடனடியாக சேர வேண்டும் என்று எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், 5 சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விரிஞ்சிபுரம் எஸ்ஐ எஸ்.முரளிதரன் பொன்னைக்கும், இங்கு பணியாற்றி வரும் ஜே.சீனிவாசன், விரிஞ்சிபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியூர் எஸ்ஐ பி.ரேகா, லத்தேரிக்கும், இங்கு பணியாற்றி வரும் எம்.குமரன் அரியூருக்கும், ஏ.குமார், வேப்பங்குப்பத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி