தோகைமலை அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

 

தோகைமலை, பிப். 8: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கல்லடை மெய்காப்பு மகன் முத்துச்சாமி (64). இவர், தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்துள்ளார். இதேபோல் கல்லடை க.புதூர் கருப்பையா மனைவி துளசி (49). இவரும் தனது வீட்டின் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் முத்துச்சாமி மற்றும் துளசியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்