2 லட்சுமிய தூக்கி வந்து சண்டை போடுறீங்களே.. சீமான் விரக்தி

ஊட்டி: நான் லட்சியத்தை தூக்கிட்டு வர்றேன். ஆனா நீங்க ரெண்டு லட்சுமிய தூக்கி வந்து சண்டை போடுறீங்களே என சீமான் விரக்தி பேட்டி அளித்தார். ஊட்டியில் நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து கேட்கிறீர்கள். நான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக்கொண்டு வருகிறேன். ஆனால், 2 லட்சுமிகளை தூக்கிவந்து என்னிடம் சண்டையிடுகிறார்கள். அரசியல் பின்னணி இல்லாமல் இப்படி புகார் கூறுவார்களா? 13 ஆண்டுகளாக இந்த பிரச்னையை தேர்தல் வரும்போது பேசுகிறார்கள். நான் ஒரு குடும்பத்தில் பிறந்தவன். நல்ல குடும்பத்தில் பெண் எடுத்துள்ளேன். அவ்வளவு அவமானங்கள் ஏச்சு, பேச்சுகள் எல்லாவற்றையும் தாண்டி நான் போராடுகிறேன்.

நான் சமூக மரியாதைக்கு, மனித மாண்புக்கு, ஒரு கண்ணியத்துக்கு அமைதியாக உள்ளேன். நான் அமைதியாக இருப்பதால் அந்த பெண் சொல்வதையெல்லாம் நீங்கள் உண்மையென்று நம்பினீர்களானால் ஒருநாள் நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தலைகாட்ட முடியாது. அந்த பெண் என்னைபோல 10 பேர் மீது புகார் கொடுத்துள்ள ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதை காட்டுவதற்கு நேரம் வரட்டும் என்று நான் இருக்கிறேன். கர்நாடகாவில் பேட்டி அளித்த விஜயலட்சுமி, பாஜ எம்.பி.யும், நடிகருமான ஜக்கேஷ் என்பவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறுகிறார்.

நான் திருமணம் செய்தேன் என்று கூறுகிறார் அல்லவா. அந்த ஒரு போட்டோவை அவர் வெளியிட வேண்டியதுதானே? எதுவும் வெளியிடாமல் அவர் என்னை திருமணம் செய்துவிட்டார், என்னை ஏமாற்றிவிட்டார், என்னை அப்படி பண்ணிவிட்டார், இப்படி பண்ணிவிட்டார் என்று சொல்வதையெல்லாம் சமூகம் எப்படி ரசிக்கிறது என தெரியவில்லை. இதேபோல நான் ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா.வீரலட்சுமி தமிழ்நாட்டு பெண்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறாராம்.

ஏன் என்னிடம் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? நீங்கள் செய்யும் கேவலங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது சரிதான். வீரலட்சுமிக்கு இதில் என்ன இருக்கிறது? விஜயலட்சுமியாவது என்னுடன் ஒரு படம் நடித்தார். உங்களுக்கு நான் வளர்வதில் பொறாமை, எரிச்சல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. ஒரு தமிழர் ஏறிப்போவதில் தமிழர் அல்லாதோருக்கு வெறுப்பு இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார். என்னை போல 10 பேர் மீது புகார் கொடுத்துள்ள ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதை காட்டுவதற்கு நேரம் வரட்டும் என்று நான் இருக்கிறேன்.

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு