நான் சமூக மரியாதைக்கு, மனித மாண்புக்கு, ஒரு கண்ணியத்துக்கு அமைதியாக உள்ளேன். நான் அமைதியாக இருப்பதால் அந்த பெண் சொல்வதையெல்லாம் நீங்கள் உண்மையென்று நம்பினீர்களானால் ஒருநாள் நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தலைகாட்ட முடியாது. அந்த பெண் என்னைபோல 10 பேர் மீது புகார் கொடுத்துள்ள ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதை காட்டுவதற்கு நேரம் வரட்டும் என்று நான் இருக்கிறேன். கர்நாடகாவில் பேட்டி அளித்த விஜயலட்சுமி, பாஜ எம்.பி.யும், நடிகருமான ஜக்கேஷ் என்பவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறுகிறார்.
நான் திருமணம் செய்தேன் என்று கூறுகிறார் அல்லவா. அந்த ஒரு போட்டோவை அவர் வெளியிட வேண்டியதுதானே? எதுவும் வெளியிடாமல் அவர் என்னை திருமணம் செய்துவிட்டார், என்னை ஏமாற்றிவிட்டார், என்னை அப்படி பண்ணிவிட்டார், இப்படி பண்ணிவிட்டார் என்று சொல்வதையெல்லாம் சமூகம் எப்படி ரசிக்கிறது என தெரியவில்லை. இதேபோல நான் ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா.வீரலட்சுமி தமிழ்நாட்டு பெண்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறாராம்.
ஏன் என்னிடம் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? நீங்கள் செய்யும் கேவலங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது சரிதான். வீரலட்சுமிக்கு இதில் என்ன இருக்கிறது? விஜயலட்சுமியாவது என்னுடன் ஒரு படம் நடித்தார். உங்களுக்கு நான் வளர்வதில் பொறாமை, எரிச்சல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. ஒரு தமிழர் ஏறிப்போவதில் தமிழர் அல்லாதோருக்கு வெறுப்பு இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார். என்னை போல 10 பேர் மீது புகார் கொடுத்துள்ள ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதை காட்டுவதற்கு நேரம் வரட்டும் என்று நான் இருக்கிறேன்.