திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி முகுந்தன், சத்யா, அவர்களது ஒன்றரை வயது மகன் மீது கார் மோதியது. கார் மோதியதில் மனைவி சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் முகுந்தன், அவரது மகன் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு மீண்டும் வேகமாக சென்ற கார் நூற்பாலையின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது மோதியதில் 3 வயது பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளது.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்