போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி இடையே 2 விமான சேவைகள் ரத்து

சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னை – டெல்லி இடையே 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஓரிரு தினங்களாக கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் 126 டிகிரி வரையில் வெயில் கொளுத்துகிறது.

இதனால் டெல்லிக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் டெல்லியில் இருந்து நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு டெல்லி சென்றடையும் விமானமும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களுக்கு குறைந்த அளவிலான பயணிகள் முன்பதிவு செய்து இருந்ததால், அந்தப் பயணிகளின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி