தஞ்சாவூர் அருகே 2 எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியது

கும்பகோணம்: தஞ்சாவூர் அருகே விடிய விடிய சார்ஜ் போட்டதால் 2 எலக்ட்ரிக் பைக் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆழ்வான் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (46). டீத்தூள் குடோன் வைத்துள்ளார். குடோனுக்கு மேலே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தனது பேட்டரி கார் மற்றும் 2எலக்ட்ரிக் பைக்குகளை வராண்டா பகுதியில் நிறுத்தி பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று தூங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை குடோன் முழுவதிலும் திடீரென புகை மண்டலம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் போன் மூலம் தகவல் தெரிவிக்கவே அவர் இறங்கி வருவதற்குள் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து குடோனுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு கார், 2 டூ வீலர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் புகைமண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்த சதீஷ் குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீ தூள் பாக்கெட்டுகள் மற்றும் 2 எலக்ட்ரிக் பைக்குகள், ஒரு பேட்டரி கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி