வங்கி கணக்கில் ரூ.2 கோடி பணப்பரிமாற்றம்; அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலையில் இருந்து நின்றுவிட்ட 5 பணியாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.2 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுகுறித்து இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கண்ட 5 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே குமாரராஜிபேட்டை காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் தமிழரசன் (25). இவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், பிரகாஷ் உள்பட 5 பேர், சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தற்காலிக பணியாளர்களாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் தமிழரசன் உள்பட 5 பேரும் திடீரென வேலையைவிட்டு நின்றுவிட்டனர்.

குறிப்பிட்ட ஒரு மாத இடைவெளியில் தமிழரசன் உள்பட 5 பேரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக சுமார் ரூ.2 கோடிக்கும் மேலாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இப்புகாரின்பேரில், சென்னையில் இருந்து இன்று காலை 5 வாகனங்களில் குமாரராஜிபேட்டைக்கு 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு வந்திறங்கினர். பின்னர் குமாரராஜிபேட்டையில் உள்ள தமிழரசன் உள்பட அவரது 5 நண்பர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சோதனையின்போது, கடந்த ஒரு மாத காலத்தில் தமிழரசன் உள்பட 5 பேரின் வங்கி கணக்குகளில் கணக்கில் வராத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி

மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி