‘2 கோடி தொண்டர்கள் எம்ஜிஆர்தான் காரணம்’

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுக இயக்கத்தை நிறுவியவர் எம்ஜிஆர். 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர்தான். அதிமுக மக்களிடத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் பொறாமையால்தான், எம்ஜிஆரை விமர்ச்சிக்கிறார்கள். எம்ஜிஆர் எதிரியையும் வாழ வைத்தவர்’ என்றார்.

Related posts

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்