2 பஸ்கள் மோதலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பயணிகள் 21 பேர் பலத்த காயமடைந்ததோடு, மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.