Wednesday, September 18, 2024
Home » 2 பஸ்கள் மோதலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு

2 பஸ்கள் மோதலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பயணிகள் 21 பேர் பலத்த காயமடைந்ததோடு, மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

16 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi