வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த 3 பேர் நேற்று பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவத்தில் தொடர்புடைய முகமது வசீம், நர்மதன் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீஸ் தேடி வருகிறது.

 

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது