2 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ராஜினாமா

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அட்வகேட் ஜெனரல் மற்றும் 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரசு தரப்பில் ஆஜராகி வருகிறார்கள். இந்த நிலையில், இவர்களில் இரு கூடுதல் அட்வகேட் ஜெனரல்களான சிலம்பண்ணன், அருண் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, புதிய கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரசு வழக்கறிஞர்களில் சிலரும் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அருண் தனது கடிதத்தில் கட்சி பணியில் மீண்டும் தன்னை இணைத்து கொள்வதற்காக இந்த ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை