கர்நாடகாவில் விபத்தில் 2 மாணவிகள் பலி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவிகள் உயிரிழந்தனர். மான்வியின் புறநகரில் உள்ள லலோலா பள்ளியிலிருந்து ராய்ச்சூர் நோக்கி சென்றபோது பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது. மான்வி தாலூகாவில் உள்ள கப்கல் அருகே நிகழ்ந்த விபத்தில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 13 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயம் அடைந்த குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக RIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை