2 இலங்கை விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறையால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து நேற்று அதிகாலை 2:10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் வருகை விமானம், அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு, இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் புறப்பாடு விமானம் ஆகிய 2 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்த 2 விமானங்களில், பயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் இந்த இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விமானத்தில் பயணிக்க மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். அந்த பயணிகளுக்கு, வேறு விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி