சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு நாளை மற்றும் நாளை மறுதினம் (செப். 10, 11) விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது. நாளை வழக்கமான வார விடுமுறை மற்றும் நாளை மறுதினம் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ள விடுமுறையால் தொடர்ந்து 2 நாட்களுக்கு அருங்காட்சியகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.