திருப்பூரில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி

திருப்பூர்: திருப்பூரில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பண்ணைக்கிணறு பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு பயிலும் மிதுன் ராஜ்(11), 7ம்‌வகுப்பு பயிலும் வினோத்(12) என்ற சிறுவர்கள் நேற்று விளையாட சென்ற நிலையில் வீடு திரும்பாததால் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடி வந்தனர்.

இந்நிலையில் விளையாட சென்ற சிறுவர்கள் அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. குட்டையில் மிதந்த சிறுவர்கள் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்