28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் நேற்று 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 18,716 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 230 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு  திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 34,14,933 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.      …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை