பாடாலூர், மார்ச் 14: பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகா, ஈச்சங்காடு கிராமத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி ஈச்சங்காடு கிராமத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு பூமிபூஜை தொடங்குவதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஈச்சங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்….