குளித்தலை, ஆக. 2: குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் வீடு மராமத்து பணி செய்வதற்கு 26 பயனாளிகளுக்கு பணி உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் வீடு பராமரிப்பு பணி பயனாளிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் பணி ஆணை வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் தேன்மொழி தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பெரியசாமி, நகர பொருளாளர் தமிழரசன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.