ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா (39). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 22வயதான மூத்த மகன், இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 21 வயதான 2வது மகன் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி லலிதா, வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளுடன் திடீர் மாயமானார். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் அய்யப்பனுக்கு, லலிதா வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், கடலூரை சேர்ந்த 25 வயது வாலிபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் காதலனுடன் லலிதா இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக லலிதாவின் மூத்த மகன் ஒரத்தநாடு போலீசில் நேற்று புகார் கொடுத்தார். போலீசார் 2 பேரையும் தேடி வருகின்றனர்….