Thursday, July 4, 2024
Home » 25 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

25 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

by kannappan

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள உத்தரவு: திருச்சி மாவட்டம் மணப்பாறை டிஎஸ்பியாக இருந்த பிருந்தா, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாகவும், விருதுநகர் டிஎஸ்பியாக உள்ள அருணாச்சலம், தஞ்சாவூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சரவணன், தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த செந்தில்குமரன், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக உள்ள செல்வம், புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், கரூர் மனித உரிமைகள் ஆணைய பிரிவு டிஎஸ்பியாக உள்ள சீனிவாசன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக இருந்த மனோகரன், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினம் டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி பாலச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டிஎஸ்பியாகவும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன், சிவகங்கை மாவட்ட மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பியாக உள்ள நமச்சிவாயம், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் டிஎஸ்பியாக உள்ள மகாதேவன், திருச்சி ரயில்வே குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ஸ்ரீதர், கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பியாகவும், திருச்சி சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி வீரமணி, நாகப்பட்டினம் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் டிஎஸ்பி தினேஷ்குமார், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினம் டிஎஸ்பியாக உள்ள சிவராமன், திருவாரூர் டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டிஎஸ்பி ஜெயசீலன், திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் டிஎஸ்பி சரவணன், திருநெல்வேலி நகர குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், கரூர் பயிற்சி டிஎஸ்பியாக உள்ள சத்தியராஜ், திண்டுக்கல் மாவட்டம் பழனி டிஎஸ்பியாகவும், திருச்சி நில அதிகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பால்சுதீர், தேனி டிஎஸ்பியாகவும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாக உள்ள சுப்பையா, திருச்சி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பெரம்பலூர் பயிற்சி டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா, தர்மபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி பயிற்சி டிஎஸ்பியாக உள்ள சஞ்சீவ்குமார், பெரம்பலூர் டிஎஸ்பியாகவும், அரியலூர் பயிற்சி டிஎஸ்பியாக உள்ள சபரிநாதன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாக உள்ள வேலுமணி, திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், மயிலாடுதுறை பயிற்சி டிஎஸ்பி ஜனனி பிரியா, மணப்பாறை டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். …

You may also like

Leave a Comment

15 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi