25 கிலோ மாவா பறிமுதல்

பெரம்பூர்,: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு அசோக் பில்லர் அருகே வியாசர்பாடி போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்தவரை மடக்கி, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா என்ற போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர், சவுகார்பேட்டை சுந்தர முதலி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பதும், வியாசர்பாடி பகுதியில் உள்ள கடைகளுக்கு மாவா சப்ளை செய்ததும் தெரிந்தது. பின்னர், அவரது வீட்டை சோதனை செய்தபோது 25 கிலோ மாவா மற்றும் மூலப் பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்