24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை: படகு ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த 20ம் தேதி கடலுக்குச் சென்ற அந்தோணி ஆரோன், ராஜ், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும், 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன், 2 படகுகளின் உரிமையாளர்களான அந்தோணி ஆரோன் மற்றும் ராஜ் படகின் ஓட்டுநர்களாக சென்று சிறை பிடிக்கப்பட்டதால் படகுகளை அரசுடமையாக்கியும், மற்றொரு படகின் ஓட்டுநரான ஜெகன்(46) 2வது முறை பிடிபட்டதால் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் 24 மீனவர்கள் 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து விடுதலை செய்தனர். அருளானந்தம் ஜூன் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்