22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது

புதுடெல்லி: இந்திய சட்ட ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன் லோக்பால் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்