2003 டிச.22க்கு முன் தேர்வான ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பழைய பென்சன் வாய்ப்பு: நவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பழைய பென்சன் திட்டத்தில் சேர ஒன்றிய அரசு புதிய வாய்ப்பு வழங்கி உள்ளது. பழைய பென்சன் திட்டத்திற்கு பதில் தேசிய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய ஓய்வூதிய முறைக்கு முன்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து 2003 டிசம்பர் 22ம் தேதிக்கு முன்பு தேர்வான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்ஓஎஸ் அதிகாரிகள் பழைய பென்சன் திட்டத்தில் இணைய ஒரு புதிய வாய்ப்பை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. அதன்படி தேசிய ஓய்வூதிய முறை அமலுக்கு வருவதற்கு முன்னதாக, அதாவது 22.12.2003ல் பணியில் சேர்ந்த அதிகாரிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளின் இணைய ஒரு முறை அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்காதவர்கள் தொடர்ந்து தேசிய ஓய்வூதிய முறையில் இடம் பெறுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது