சீர்காழி: வேளாங்கண்ணியில் 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது. சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகையில் அதிகனமழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், கடலூர் மாவட்டம் புவனகிரியில் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது. கொள்ளிடம், புவனகிரி, மீனம்பாக்கம், நன்னிலம், சேத்தியாத்தோப்பு, கடலூர் அண்ணாமலை நகரில் மிக கனமழை பதிவானது.