3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு..!!

சென்னை: 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையிலான ஊதியத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு முழுவதும் 5,060 பணியிடங்கள் இருக்கின்றன. நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் முதல்கட்டமாக 2,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 305 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மதுரையில் 155, திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்