விஜய் உள்பட எல்லாரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம். இது சமத்துவ நாடு. 14 வயசிலேயே பள்ளியிலேயே பாடத்திட்டத்தில் அரசியலை கற்று கொடுக்க வேண்டும். யார் வந்தாலும் சந்தோஷம். மகிழ்ச்சிதான். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு ரொம்ப தூரம் உள்ளது. முதலில் நாளைக்கு இருப்போமான்னு பார்ப்போம். இவ்வாறு பேசினார். சமீபத்தில் தான் சரத்குமார் நூறு வருஷத்துக்கு மேல் வாழ்வது எப்படி என்கிற ரகசியத்தை சொல்கிறேன் என்ற நிலையில் நாளைக்கு இருப்போமான்னு பார்ப்போம் என்ற பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.