2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வே.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் உள்ளனர்.

மேலும் வெளியான அறிக்கையில்; “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை – கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக்குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

* கே.என்.நேரு
* ஆர்.எஸ்.பாரதி
* எ.வ.வேலு
* தங்கம் தென்னரசு
* உதயநிதி ஸ்டாலின்

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை