Wednesday, July 3, 2024
Home » 2025ல் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட், கிரிப்டோ கரன்சி மூலமான வருவாய்க்கு 30% வரி : ஒன்றிய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!!

2025ல் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட், கிரிப்டோ கரன்சி மூலமான வருவாய்க்கு 30% வரி : ஒன்றிய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!!

by kannappan

புதுடெல்லி: 2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்தினார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் பின்வருமாறு.. * நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள், பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். *ஒரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய இந்த திட்டம் உதவும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். *மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம்,வாத்சல்யா இயக்கம்,  ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. *நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள  ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். *மத்திய அமைச்சகங்களில் காகிதமில்லா இ.பில் திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சகங்களில் காகித பயன்பாட்டை முற்றாக குறைக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்*நடப்பாண்டிலேயே 5ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறோம். நடப்பாண்டிற்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். *2023ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.*ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.*ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68% ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *நாட்டின் மூலதன செலவினம் கடந்தாண்டை விட 35.40%ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நுகர்வை அதிகரிக்க, அரசின் மூலதன செலவினத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.*பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் சேவை*’சர்வதேச தீர்வு மையம்’தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளை, விவகாரங்களை தீர்த்து வைக்க சர்வதேச தீர்வு மையம் ஏற்படுத்தப்படும்*வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும். இந்திய பண மதிப்பான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.. டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும்.பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்*மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் ‘மன ஆரோக்கிய’ திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும். *மாநில அரசுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி அளவு ரூ.15,000 கோடியாக அதிகரிக்கப்படும்.*மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மூலதன கடனாக வழங்கப்படும்வரும் நிதியாண்டின் கணக்குப் பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-2026ஆம் நிதியாண்டிற்குள் கணக்கு பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.             *மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.*சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்         *5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் வரையில் நீட்டிப்பு. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை. *குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பன்னாட்டு நிதி தீர்ப்பாயம் அமைக்கப்படும்.நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் ரசாயனம் உற்பத்தி செய்ய 4 புதிய தொழிற்சாலைகள்*திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும்*மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க ‘பர்வத்மாலா’ திட்டம்.எளிதாக தொழில் தொடங்க சூழல் 2.0 திட்டம் துவங்கப்படும்.உற்பத்தி துறையில் ஒற்றை சாளர முறையில் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் *கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி 18%லிருந்து 15%ஆக குறைக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் கூடுதல் வரியில் 5% குறைக்கப்படும்.*விர்ச்சுவல் மூலதன சொத்துகள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும். பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாய வரியில் கூடுதல் வரி 15%ஆக இருக்கும்*2022 ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளது. பெருநிறுவங்களுக்கான வரி 12%லிருந்து 7%ஆக குறைக்கப்பட்டுள்ளது…

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi