மதுரை: ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால்தானே முழுமையாக விசாரிக்க முடியும் என 2019 நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்.டி.ஏ.வுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. “நீட் ஆள்மாறாட்ட வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா?, சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை வழங்கவில்லை ” நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேசிய தேர்வு முகமையிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.