20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது கும்பகோணத்தில் 3 கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சமத்தனார்குடி விசாலாட்சி அம்மன் சமேத காசிவிஸ்வநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார், தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய 3 கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சமத்தனார்குடி அண்ணா நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார், தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய ஆலயங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த இரண்டாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 4 கால பூஜைகள் முடிந்து, 3 கோயில் கும்பத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?