பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே சோளிங்கர்-சித்தூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, கல்யாணபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சுமார் 100 ஆண்டு கால பழமையான பனைமரம், தற்போது ஆலமரம் போல் ஏராளமான கிளைகளுடன் பரந்து, விரிந்த நிலையில் அழகுற காட்சியளிக்கிறது. பொதுவாக, பனைமரம் என்றால் வேர் முதல் உச்சிவரை ஒற்றையாக காட்சியளிக்கும். ஆனால்,இங்கு இயற்கையின் அதிசயமாக, 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பரந்து விரிந்த நிலையில் பனைமரம் காட்சியளிப்பதை கண்டு மக்கள் அதிசயித்து வருகின்றனர். இதுகுறித்து தாவரவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்….