20ம் ஆண்டு குருபூஜை விழா

 

ராசிபுரம், டிச.11: பண்டிட் சோமானந்தா மகரிஷி 20ம் ஆண்டு குருபூஜை விழா கட்டனாச்சம்பட்டி சோமானந்தா மகரிஷி ஐக்கிய பீடத்தில் நடந்தது. சென்னை குறள்நெறி தவாலயம், ராசிபுரம் வள்ளலார் ஞானசபை இணைந்து இதனை நடத்தின. குருபூஜையில் சோமானந்தா மகரிஷி குறித்து வழிமுறைகள், ஆன்மீக தத்துவங்கள் குறித்து விளக்கப்பட்டது. பிரசாதம், அன்னதானம் வழங்கினர். முன்னதாக சித்தர் நெறி தவயோகம் சார்பில் வாசியோகம், குண்டலியோகாப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சோமானந்தா மகரிஷி சீடர் ஆனந்த சிவஜோதி பங்கேற்று யோகப் பயிற்சி அளித்தார். இதில் சீடர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்