2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பொன்னேரி: பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (50). இவர், அதே பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, குழந்தையின் பெற்றோருக்கு தெரிய வரவே, திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோன்று, கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது பழவேற்காடு பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!