ராஜ்பவனில் உள்ள சாந்திபவனில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவிபிரமாணத்தின்போது ராம்நிவாஸ் கேபினெட் அமைச்சர் என்பதற்கு பதிலாக இணை அமைச்சர் என்று கூறி பதவியேற்றுக்கொண்டார். இது குறித்து ஊடகங்கள் மூலம் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து உடனடியாக தர்பார் ஹாலில் மீண்டும் ராம்நிவாஸ் பதவி பிரமாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக ராம்நிவாஸ் பதவியேற்றார். அப்போது கேபினெட் அமைச்சர் என்று கூறி அவர் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மங்குபாய் படேல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.