இந்த மலர் கண்காட்சி 20ம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. பூங்காவில் புதிதாக சில மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. 17 நாட்களாக நடந்த மலர் கண்காட்சியை 2 லட்சத்து 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் மேலும் சில நாட்கள் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.