2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி, மார்ச் 15: பெரும்பாலை அருகேயுள்ள நாகமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் பெங்களூருவில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (32). இவர்களுக்கு தேவிகா (16), ராஜேஸ்வரி (14) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8ம்தேதி, அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடந்த தெருக்கூத்தை பார்ப்பதற்காக, முத்தம்மாள் தனது 2 மகள்களுடன் சென்றார். பின்னர், அவர்கள் 3பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி ஈஸ்வரன் பெரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்