2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

ஈரோடு, ஜூலை 23: புளியம்பட்டி அடுத்துள்ள வினோபாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி பிரியா(31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரியா அங்குள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி பிரியா திடீரென்று மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் கணவர் கார்த்திகேயன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல தாளவாடி அடுத்துள்ள தொட்டகாஜனூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி லாவண்யா(24). இவர்களுக்கு குழந்தை இல்லை. கார் டிரைவிங் பள்ளியில் பணியாற்றி வந்த லாவண்யா 20ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் திடீரென்று மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் லாவண்யா குறித்த தகவல் இல்லாததால் கணவர் சந்திரசேகர் தாளவாடி போலீசில் புகார் செய்துள்ளார்.

ஈரோடு வெண்டிபாளையம், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் குமார்(48). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த குமார் கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் இல்லாததால் மனைவி பூங்கொடி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்ததையடுத்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை