2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு

 

திருமங்கலம், ஜூலை 13: திருமங்கலம் அருகே, 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள புங்கன்குளத்தை சேர்ந்தவர் மார்க்கண்டன். இவரது மனைவி சுந்தரவள்ளி (49). இவர்கள் சித்தாலை செல்லும் சாலையில் உள்ள ஒத்தவீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன் தினம் மதியம் 1 மணியளவில் சுந்தரவள்ளி வீட்டின் முன்பு அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார். அப்பகுதியில் திருமங்கலம் சோழவந்தான் சாலையை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி தெய்வகனி (25) டூவிலரில் சென்றார்.

ஆள்நடமாட்டமில்லாத அப்பகுதியில், அவரை பின் தொடர்ந்து மற்றொரு டூவீலரில் வந்த வாலிபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வகனி கழுத்திலிருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளான். அவர் சப்தம் போடவே, வீட்டின் முன்பிருந்த சுந்தரவள்ளி ஓடி சென்று வழிப்பறியை தடுக்க முயன்றுள்ளார். இதில், ஆத்திரமடைந்த வழிப்பறி கொள்ளையன், சுந்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகை உள்ளிட்ட 8 பவுன் தங்க நகையுடன் அங்கிருந்து டூவீலரில் தப்பியோடினான். இது குறித்து சுந்தரவள்ளி கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, இரண்டு பெண்களிடம் 8 பவுன் தங்க நகை பறித்து சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை