2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: சசிகலா 2 நாள் பயணமாக இன்று தஞ்சை செல்கிறார். அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் அவர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். ஆனால், கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர், அதிமுக நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்தார். இதேபோல், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.அந்தவகையில், கடந்த 4ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு கோயில்களில் சாமி தரிசனம் செய்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்து பேசினார். இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில், சசிகலா இன்று சென்னையில் இருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார். காலை 7 மணிக்கு புறப்படும் சசிகலா, மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி கோயில், மயிலம் முருகப்பெருமான் கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தஞ்சை வரும் சசிகலா, பரிசுத்த நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். 2 நாள் தங்கும் அவர், ஆலங்குடி குரு பகவான் கோயில் உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார். மேலும், திருச்செந்தூரில் ஓபிஎஸ் தம்பி ராஜாவை சந்தித்து பேசியது போல், இங்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தஞ்சை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்