2 டூவீலர்கள் திருட்டு

தர்மபுரி: பாலக்கோடு பேளாரள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், கட்டிட மேஸ்திரியான இவர், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே தனது டூவீலரை நிறுத்தி விட்டு, பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அசந்த சமயத்தில், ₹1 லட்சம் மதிப்பிலான டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் பாலக்கோடு சவுரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முரளி மகன் விஜய் என்பவர் நிறுத்திச் சென்ற டூவீலரையும், மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி