2 குழந்தைகளுடன் தந்தை திடீர் மாயம் நகை, பணத்தையும் எடுத்துச் சென்றார்

அரூர், ஜூலை 3: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே, நெருப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (35), தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு ரோகித்சரண் (11) என்ற மகனும், ஜோசியா (5) என்ற மகளும் உள்ளனர். பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்த ₹50 ஆயிரம் மற்றும் தங்க நகைகளை எடுத்து கொண்டு வெளியே சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பவித்ரா அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் வண்டல், களிமண் எடுக்கலாம்

புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டம்