Thursday, July 4, 2024
Home » 2 குழந்தைகளுடன் தந்தை திடீர் மாயம் நகை, பணத்தையும் எடுத்துச் சென்றார்

2 குழந்தைகளுடன் தந்தை திடீர் மாயம் நகை, பணத்தையும் எடுத்துச் சென்றார்

by Karthik Yash

அரூர், ஜூலை 3: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே, நெருப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (35), தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு ரோகித்சரண் (11) என்ற மகனும், ஜோசியா (5) என்ற மகளும் உள்ளனர். பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்த ₹50 ஆயிரம் மற்றும் தங்க நகைகளை எடுத்து கொண்டு வெளியே சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பவித்ரா அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi