2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சேலம், ஆக.30: சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்தவர் மகாதேவன்(24). இவர் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிதா(23). இவர்களுக்கு இரண்டரை வயதில் அனு, 8 மாதத்தில் ஷர்மி ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 16ம் தேதி வீட்டில் இருந்த நிதா, இரண்டு குழந்தைகளுடன் திடீரென மாயமானார். அவர்களை மகாதேவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மும்பையை சேர்ந்த நிதா, மகாதேவனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனிடையே மகாதேவனின் வீட்டின் அருகேயுள்ள வாலிபர் ஒருவரும் மாயமாகியுள்ளார். இதனால் அவருடன் நிதா மும்பைக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டாரா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை