2 குழந்தைகளின் தாய் மாயம்

சேலம், ஜூலை 25: சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி சித்ரா (29). 2 குழந்தைகள் உள்ளனர். டிரைவரான தாமோதரனுக்கும் மனைவிக்கும் வீட்டு செலவுக்கு பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சித்ரா திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாமோதரன், கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கார் வாங்குவதற்காக தாமோதரன் கடன் வாங்கினார். கொரோனா காலக்கட்டத்தில் தவணை தொகையை செலுத்த முடியாமல் போனது. அதனை வசூல் செய்ய வந்த வாலிபருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி